மருதூர் ஸக்கீ செய்ன்

அரசியல் ஆட்சி மாற்ற சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்களின் வகிபாகம் எவ்வாறு அமைந்தால் சிறந்தது.

தற்பொழுதைய நல்லாட்சி அரசாங்கத்தை அரசியல் தலைவர்களால் தெரிவு செய்வதற்கு முதலில் முஸ்லிம் சமூகத்தால் விரும்பி இந்த ஆட்சியை உருவாக்கினர்.

ஆனால் ஆட்சி செய்கின்ற நபர்கள் மாறினாலும் இனவாதிகளின் செயற்பாடுகள் காட்சிகளோ எதுவும் மாறவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை இனவாதிகள் அடக்கப்பட வில்லை கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான பல சவால்கள் ஏற்படுத்தப் பட்டது இனவாதிகளின் ஒடுக்குமுறை போராட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தமட்டில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளையும்
டேஷ் போறாக்களின் உறவுகளை பாதுகாத்து அவர்களின் கொள்கையில் அரசியல் செய்கின்ற ஒரு தலைவராக காணப்படுகிறார்

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் வடகிழக்கில் முல்லைத்தீவு முள்ளியவளை தொடக்கம் கல்முனை வரை முஸ்லிம் சமூகத்துக்கு சவாலாக இருக்கும் நபர்கள் என்றால் தமிழ் டயஸ்போரா கொள்கை கொண்டவர்களே

ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுமந்திரனை அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பின்னணிகள் ஐரோப்பிய அமெரிக்காவின் அடிப்படையாகக் கொண்டது

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் சிங்கள மக்களால் எந்த சவால்களும் ஏற்படுத்தப் போவதில்லை அதே போன்று வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் மக்களுக்கு இனவாதிகளால் ஏற்படுத்தப் படுகின்ற சவால்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிய சவால்கள் ஆகவே காணப்படுகிறது இவ்வாறு அன்னையில் விமல் வீரவன்சவும் வெளிப்படையாக சொல்லி விட்டார்

இனவாதிகளால் தற்பொழுது ஏற்படுத்தப் படுகின்ற சவால்களை ரணில் விக்கிரமசிங்க கண்டும் காணாதது போல் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவரின் அரசியல் பித்தலாட்டத்தை காட்டுகிறது

ஆகவே சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவது சிறந்தது என்பதற்கு அமைய வடகிழக்குக்கு வெளியில் காணப்படுகின்ற இனவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வடக்கில் காணப்படுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான தமிழ் சவால்களை இல்லாமல் செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் விரும்பியோ விரும்பாமலோ ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகின்ற அரசியல் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்க இல்லாத ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் அதனால் வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சொல்லுகின்ற செயல்களை அமுல் படுத்துகிற ஒருவராகத்தான் இருப்பார்

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றுதான் மஹிந்த ராஜபக்சவும் ஒன்றுதான் ஆனால் இரண்டு தலைவர்களுக்கு பின்னால் இருக்கின்ற சர்வதேச அரசியல் நிகழ்ச்சிநிரல் நாடுகளையும் பின்னணிகளையும் அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்

ஆகவே முஸ்லிம் சமூகம் மிகவும் சாதுரியமாக சிந்தித்து எதிர்கால சமூகத்தின் பாதுகாப்பு இருப்பிடம் கடந்த கால ஆட்சி ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு வட்டத்துக்குள் வைத்து சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் கணித்து சமூகம் சார்ந்த ஒரு ஆட்சியை ஏற்படுத்த கூடிய முடிவை எடுக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்களினதும் கடமையாகும் இதில் தவறு விட்டால் முஸ்லிம் சமூகம் தற்போதைய நிலையை விட பாரிய சவால்களையும் உரிமை இழப்புகளையும் எதிர்நோக்க வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Post A Comment: