எஸ்.எச்.எம்.பிர்தௌஸ்

தமிழ் பேசும் இனங்கள் ஒருமித்து போராட முன்வரவேண்டும்!

பேரினவாதம் பௌத்த காவிகளுக்குள் மறைந்துகொண்டு சிறுபான்மை பிரதேசங்களை காவு கொள்வதை அனுமதிக்க முடியாது ! தமிழ்பேசும் இனங்கள் இணைந்து தடுக்க வேண்டும் !.

முஸ்லிம் தமிழ் பிரச்சினைகளை சிற்றின ஏவல் ஏஜென்டுகளான கருனா வியாளேந்திரன் கோடிஸ்வர்ன் போன்றவர்களை வைத்து தமிழ் முஸ்லிம் பகுதிகளில் உருவாக்கிவிட்டு அவர்களிடையே பகைமை உணர்வுகளை விதைத்து விட்டு அறவே சிங்களவர்களே இல்லாத பிரதேசங்களில் விகாரைகளை உருவாக்கி தமிழர் பகுதிகளை துண்டாடும் காரியத்தை பேரின பௌத்த இனவாதிகள் மிக நுணுக்கமாக மேற்கொள்ள முனைவதே கன்னியாவில் இப்போது அரங்கேறுகிறது ,

கல்முனையில் முஸ்லிம்களின் பூர்வீகத்தை கூறுபோட இனவாத ஏஜன்டுகளான வியாளேந்திரன் கும்பலை தூண்டி அதற்கு தாங்களும் உண்ணாவிரதிகளாக அமர்ந்து தமிழர்களிடம் நல்ல பெயர் வாங்க முயன்ற பேரினவாத பௌத்த கும்பல் இப்போது கன்னியாவில் ஆடும் நாடகத்துக்கு இப்போது தமிழர் துரோக கூட்டமான இந்த வியாளேந்திரன் கும்பல் என்ன எதிர்வினையாற்ற போகிறது என்பதை தமிழர் சமூகம் அவதானிக்க வேண்டும் ,

தமிழர் தரப்பிலும் முஸ்லிம் தரப்பிலும் உள்ள சிறுபான்மை ஒற்றுமையை விரும்பாத சக்திகளை ஆங்காங்கு போசித்து வளர்க்கும் இனவாதம் மிதவாத இரு சமுக ஒற்றுமையை சீர்குலைக்க என இருபகுதிகளிலும் ரனில் அரச எதிர்ப்பு என்ற பெயரில் களமிறக்கப்பட்டு ஊடகங்களில் அத்தகையோருக்கு பலத்த ஊடக அனுசரணைகளையும் வழங்கி வருவது யாரும் அறியாத விடயமல்ல ,

எனவே சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமுகங்கள் தற்போதைய நிலைமையின் பாரதூரங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்து தங்களுக்குள் பகையுணர்வுகளை வளர்க்காது புரிந்துணர்வுடன் செயற்பட்டு சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தி பேரின ஏஜன்டுகளுக்கும் காலத்துக்கு காலம் கடசி மாறும் பச்சோந்தி தலைமைகளை வளர்க்க உதவாது அரசியல் சாணக்கியத்துடன் உள்ளக முடிவுகளை கண்டு பேரின பௌத்த ஆதிக்கத்தை சிறூபான்மை பிரதேசங்களில் இருந்து துடைத்தெறியவும் ,

தேசிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறுபான்மை விரோத எதிர்ப்பு கும்பலை பலமிழக்க வைக்க அரசியல் அழுத்தங்களை சர்வதேச ரீதியாக வழங்கவும் சிறுபான்மை இனங்கள் என்ற வகையில் காலம் தாழ்த்தாது ஒன்று பட வேண்டும்,

இதுவே எதிர்கால ஜனநாயகத்துக்கும் சிறுபான்மை இன இருப்புக்கும் நிரந்தர பாதுகாப்பை வளங்கும்.

Post A Comment: