நினைவுப் படிகம் திரை நீக்கம்

ஒரு சமூகத்தில், நிலைத்திருக்கும் இருப்பியலை உறுதிப்படுத்தும் சக்தியாக இருப்பது அதன் வரலாறும் வாழ்வியல் தடயங்களுமே. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் கிழக்கு மாகாணத்தின் கல்முனை மாநகரில் நெடும் வரலாறு கொண்ட ஒரு புராதனப் புனிதத்தலமே கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல், நாகூர் ஆண்டகை தர்கா ஆகும்.

இத்தர்கா ஒரு “புனிதத்தலம்” என்ற கருத்தியலுக்கு அப்பால், இம்மண்ணோடு இரண்டறக் கலந்திருக்கும் எம் வாழ்வையும் அதனோடு இணைந்த சமூக, பொருளாதார, அரசியல் இருப்பையும் பலப்படுத்தும் ஒரு வரலாற்றுத் தளமாகவும் இருந்து வருகிறது.

கல்முனை மண்ணின் வரலாறுகளை, அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் இதுவரை காலமும் அசிரத்தையாக இருந்த காரணத்தினால் எமது பாரம்பரிய உரிமைகளையும் தடயங்களையும், அடையாளங்களையும் இழந்த, தேடலற்ற சமூகமாக மாறி வருகிறோம்

கல்முனைக்கான பூர்வீகத்தையும் அந்த மக்கள் கொண்டுள்ள வாழ்வியல் கௌரவத்தையும் தொடர்ந்து பாதுகாக்கவும் அவற்றிற்கெதிரான சவால்களை முறியடிக்கவும் வேண்டுமாயின் எமது ஒவ்வொரு வரலாற்று முதுசங்களையும் அவற்றின் பின்னணிகளையும் செம்மையாக ஆவணப்படுத்தி ஒரு கோர்வையாக்க வேண்டிய தேவையும் அவசரமும் இன்று பலராலும் உணரப்பட்டிருக்கிறது.

அவ்வகையில் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் இதன் அவசியத்தை ஆழமாகச் சிந்தித்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் கிடைத்த பேறுதான் இன்றைய நினைவுப் படிக முதற்கட்ட நிகழ்வு!
அல்ஹம்துலில்லாஹ் !!

வரலாற்றுச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்துப் பெருமை கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு சார்பில் மனமுவந்து அழைக்கின்றோம்

காலம் : 20.07.2019 (சனிக்கிழமை)

நேரம்: இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ( இரவு 8.00 மணி

இடம்: கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் முன்றல்,

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்,
கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகம்  மற்றும்
கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம்

Post A Comment: