எஸ்.எச்.எம். பிர்தௌஸ்

எத்தனையோ பிரச்சினைகள் மஹிந்த காலத்தில் மக்களுக்கு இருந்தன, கானாமல் போதல், ஊடக அடக்குமுறை, வெள்ளை வேன்களின் அச்சத்தால் வாய்மூடி மக்கள் மௌனமாக இருந்ததற்காக அவரது ஆட்சி பிரச்சினையில்லாத ஆட்சியாக சர்வாதிகார ஆட்சியாக யாராலும் எதிர்க்க முடியாத ஆட்சியாக அன்று திகழ்ந்து !

ஆனால் இன்றைய நல்லாட்சி என்ற நாசமாகப்போன ஆட்சி வந்த காலம் முதல் வழங்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை சுதந்திரம் என்ற விடயத்தால் அனைத்து விதமான பிரச்சினைகளும் வீதிவலம் வரத்தொடங்கியதால் இந்த ஆட்சி தொடங்கிய காலம் முதல் எல்லாமே பிரச்சினையாகவே வெளிப்படுத்தப்படுகிறது ,

போதாக்குறைக்கு அரசியலமைப்பும் நீதித்துறையும் சுதந்திரமாக இயங்குவதும் ஆணைக்குளுக்களின் செயற்பாடுகளும் நிர்வாகத்தில் இருந்த முறைகேடுகளை இல்லாமலாக்க முயன்றதும் இன்னும் மேலதிக வலுவை இத்தகைய சக்திகளுக்கு வழங்கியது ,

எல்லை மீறிய ஊடக சுதந்திரமும் உண்மைகளை அறியும் தகவலறியும் சட்டமும் மக்களை ஜனநாயக்த்தின் பால் முன்னேற தூண்டியது ,

இத்தகைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தங்களது ஆட்சியை கனவிலும் அமைக்க முடியாது என்றுனர்ந்த கடந்தகால ஆட்சியாளர்கள் இருக்கும் சுதந்திரத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக இனவாத ஊடகங்களையும் இனவாதிகளையும் பின்னால் இருந்து இயக்கி இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதன் வெளிப்பாடுகளே இனவாத மோதல்களும் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டகாசங்களும் ,கடை எறிப்புக்களும் ,ஊழல் துஷ்பிரயோக செயற்பாடுகளுமாகும் ,

தொடர் வீதி போராட்டம்கள்,பிரதேச இனவாத மோதல்கள் முறுகல்கள் என உருவாக்கி மக்களுக்கு சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் வழங்கிய ஜனநாயக சக்திகளின் அரசை கையாலாகாத அரசு என ஒதுக்கி ஓரம்கட்ட இனவாதத்தையும் பௌத்த மேலாதிக்கவாதத்தையும் கையிலெடுத்து செயற்படுத்தும் இத்தகைய சக்திகளை முறியடிக்க வேண்டுமானால் என்ன விலை கொடுத்தேனும் இந்த சிறுபான்மை அரசை பாதுகாக்க வேண்டிய தேவை அடிப்படை ஜனநாயக சக்திகளுக்கு முன்னுரை விட பலமடங்கு எதிர்காலத்தில் உண்டு.

இல்லை எனில் இந்த சிறுபான்மை ஜனநாயக ஆதரவு அரசின் முடிவின் பின்னர் வரும் சிற்றினங்களுக்கு எதிரான இனவாதத்தால் வென்ற பெரும் தேசியவாத பௌத்த ஆதரவு அரசு கடந்த அவர்களின் ஆட்சியை விட பலமடங்கு அசுர வேகத்துடன் சிறுபான்மை இனங்களையும் ஜனநாயக ஆதரவு சக்திகளையும் இந்த நாட்டு அரசியலில் இருந்தும் இந்த நாட்டில் இருந்தும் துரத்தியடிக்க முனையும் என்பதை நாட்டு மக்களும் இந்த ஆட்சியில் நடைபெறும் அவலங்களை குறைபாடுகளை வைத்து இந்த சிறுபான்மை அரசை விமர்சிப்போர் புரிந்து கொள்ளல் வேண்டும் ,

கடந்த அரசின் பேரின மேலாதிக்கவாத எச்ச சொச்சங்களையும் சில முஸ்லிம் விரோத இனவாதிகளையும் சேர்த்துக் கொண்டு பயணித்து அதன் ஆட்சிக்கால முடிவை நெருங்கியுள்ள இந்த அரசை பழைய ஆட்சியின் எச்ச சொச்சங்களில் இருந்து விடுவித்து மிதவாத ஜனநாயகத்தை விரும்பும சக்திகளோடு மீண்டும் பதவிக்கு கொண்டுவந்து நேரிய உரிய ஜனநாயக ஆட்சியை ,அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் , சிறுபான்மை இனங்களுக்கு உரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டு வளங்கக் கூடிய, வெளிநாட்டு உதவும் சக்திகளோடு சேர்ந்து நாட்டை வளம்படுத்த பொருளாதாரத்தை உயர்த்த உதவ வேண்டியதே இன்றுள்ள ஜனநாயக சக்திகளின் பொதுவான தேவையாகும்,

இன்றுள்ள பிரச்சினைகளுக்கு,சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கடந்த கால நீல சர்வாதிகார பேரின கொள்கை கொண்ட நீலக்கட்சியின் ஒரு தூனாக இருந்து உள்சதி செய்து ,கூட இருந்து குழி பறித்து வந்த ஜனாதிபதியே காரணம் என்பதும் அவரின் பேரின பௌத்தவாத கொள்கையே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கடந்த பேரழிவுகளை வழங்கியது என்பதும், நாட்டு பாதுகாப்பு குறைபாட்டுக்கு அவரின் அசட்டைகளே காரணம் என்பதும் தற்போது விசாரனைகள் மூலம் வெளிவருகையில் இந்த வேறுபாட்டு கொள்கை கொண்ட இரு தலைமைகளின் ஆட்சியானது வேறுபாடான திசையில் செல்ல காரணமாகியது என்பது கண்கூடு ,

எனவே எதிர்வரும் காலத்தில் மீண்டும் இத்தகைய நிலை வராது ஒரே கட்சி ஒரே ஜனாதிபதி அதே கட்சி பிரதமர் என்ற கொள்கையோடு ஜனநாயக ஆட்சியை மாத்திரம் வலியுறுத்தும் புதிய சக்தியையும் கட்சியையும் இனம்கண்டு ஆட்சிப் பொறுப்பை மக்கள் வழங்க வேண்டும்.

அதே போன்று யுத்த வெற்றியை மாத்திரம் காட்டி ஆட்சியை பிடித்து ஜனாநாயகத்தை குழிதோண்டி புதைத்து ஊடக அடக்குமுறையை செய்து சர்வாதிகார ஆட்சி புரிய பேரின இனவாத சக்திகளை தீணி போட்டு வளர்த்த மஹிந்த கால அரசுகளை உருவாக்க இந்த நாட்டு மிதவாத சக்திகளும் அரசியல் சந்தர்ப்பவாத குழுக்களும் ஒருபோதும் துனைநின்று விடாமல் இருக்க வேண்டும்.

இல்லையேல் கருனாவும் வியாளேந்திரனும் ஞானசாரவும் டான் பிரசாத்தும் தான் இந்த நாட்டின் சட்டத்தை எழுதுவோராக எதிர்காலத்தில் இருப்பர்.

Post A Comment: