எஸ் எச் எம் பிர்தௌஸ்

முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் என்றால் அவர்கள் பதவியில் உள்ள எம் பி மார்களின் அல்லைக்கைகளாக வாழ்நாள் முழுக்க அவர்களின் புகழ்பாடிகளாக இருக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர் போலும் ?

மறைந்த மா பெரும் தலைவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்து வளர்த்த போது அதன் விழுதுகளாக இருந்தோர் முதன்மைப்போராளிகளாக தங்கள் இன்னுயிர்களையும் இழந்து, அரசு புலி தமிழர் ஆயுத இயக்க ,மற்றும் இந்தியப்படை, அட்டகாசங்களுக்கு முகம் கொடுத்து தலைவருக்கு தோளோடு தோள் நின்று எந்தவித பிரதியுபகாரங்களையும் எதிர்பார்க்காது இந்த கட்சிக்கு உரமூட்டினர் ,

பின்னர் அந்த தலைவரின் மறைவின் பின்னர் அத்தகைய முதன்மைப்போராளிகளில் பலர் புதிய தலைவராலும் அவரோடு இணைந்து வந்தவர்களாலும் , இரட்டைத்தலைமைத்துவத்தாலும் மறக்கடிக்ப்பட்டனர் அல்லது தலைவரால் அடையாளம் கான முடியாதவாறு அப்போதிருந்த சிலரால் திட்டமிட்டு ஓரம் கட்டப்பட்டனர் ,

அதே போன்று இரண்டாம் தலைமுறைப் போராளிகளும் கூட புதிய தலைவரோடு பதவிகளுக்காக அப்போது ஒட்டிக் கொண்டவர்களால் ஓரங்கட்டப்பட்டு பணபலமும் பல்கட்சி முகாம் அனுபவமும் கொண்டவர்களாலும் பதவி நிலைகளுக்குள் உற்புகுத்தப்பட்டனர் ,

அவ்வாறாக புறக்கனிக்க்பப்டட இரண்டாம் தலைமுறை போராளிகள் என்போர் திட்டமிட்டு பதவியாசை கொண்டவர்களால் புறக்கணிக்கப்பட்டதோடு மாத்திரமன்று எந்தவித கட்சி,மற்றும் அரச தொழில் வாய்ப்புக்களில் கூட உள்வாங்கப்படாது விரக்தி நிலைகளில் கடல்கடந்த நாடுகளிலும் ஏனைய பிரதேசங்களிலும் இருந்து இன்றுவரை நரைவிழுந்த நிலையில் கூட தாங்கள் புறக்கணிக்கப்பட்ட போதும் தாங்கள் வரிந்து கொண்ட மாபெரும் தலைவனினது இயக்கம் அழிவடையக்கூடாது என்ற கொள்கைக்காக இன்று வரை இந்த கட்சியையும் தலைமையையும் பல சதிகளை சந்தித்த போதும் கொஞ்சம் கூட துஞ்சாது இந்த இயக்க வளர்ச்சிக்காக இதுவரை தங்களால் முடியுமான வகையில் இந்த கட்சிக்கான பணிகளை தொடராக செய்தே வருகின்றனர் ,

ஆனால் காலத்துக்கு காலம் கட்சிகள் மாறி பதவிகளுக்காக கொள்கைகளையும் மாற்றி தலைவரையும் இந்த இயக்கத்தையும் சின்னாபின்னமாக்கி பல தலைமைகளை ஆதரித்து உருவாக்கி காடைத்தனம் புரிந்து கடைசியில் இந்த இயக்கத்தில் மீண்டும் தஞ்சமடைந்து தங்களது பணபலம் ஏனைய செல்வாக்குகள் மூலம் இப்போது கட்சியின் கொள்கை கோட்பாடு நோக்கம் என எதுவும் புரியாத சில புதியவர்களும் பதவிகளை பெற்றவர்களும் ,மீண்டும் இன்று அல்லது நாளை அல்லது அடுத்த தேர்தலுக்கு அடுத்த முகாம் பாய்ச்சலுக்கு தயாராக உள்ள சில மேய்ச்சல் குதிரைகளும் அவர்களின் அல்லைக்கைகளும் என புதிதாக முளைத்த சிலருக்கு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் முதுகு சொரியும் வேலையாட்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதும் அத்தகைய போராளிகளை ஹக்கீம் போராளி ஹரீஸ் போராளி காசிம் போராளி என அழைக்க நினைப்பதும் வெட்கப்படவைக்கிறது மாத்திரம் கொள்ளச் செய்கிறது ,

உண்மையில் இந்த கட்சியாலும் அதன் மக்கள் பதவிகளை அனுபவித்தவர்களாலும் கடந்த காலங்களில் கறிவேப்பிலைகளாக பயண்படுத்தப்பட்டு கைவிடப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட பல உண்மைப் போராளிகளின் கடல்கடந்த உயிரோட்டமான சமுகவலைத்தள இலத்திரனியல் பிரச்சாரங்களின் காரணமாகவே இந்த இயக்கம் ஊழல் தலைவனின் சதியையும் பேரின ஏஜென்டுகளினதும் இந்த மாபெரும் தலைவனின் இயக்கத்தை அழிக்கும் சதி முயற்சிகளை முறியடிக்க இப்போதைய தலைமைக்கு கடந்த காலங்களின் போது பக்கபலமாக இருந்தது என்பதை இத்தகைய புதிய அல்லைக்கைகள் மறந்து விட்டன போலும்?

முதல்நிலை இரண்டாம் நிலை தலைமுறை போராளிகளோ அல்லது உண்மையான கட்சி போராளிகளோ ஒரு போதும் தனி நபர்களுக்கு ஒருபோதும் முதுகு சொறிவோராகவோ அல்லது முகஸ்துதி பாடுபவர்களாகவோ ஒருபோதும் இருக்க போவதும் இல்லை இருக்கவும் மாட்டார்கள்.

அவர்களுக்கு தனிமனித துதிபாடல் தேவையும் இல்லை ,அவர்களுக்கு ஹரீசும் ஒன்றுதான் ஹக்கீமும் ஒன்றுதான் பைசல் காசிமும் ஒன்றுதான் ,இந்த இயக்கத்துக்கு தலைவராக வருவோரை அது யாராக இருந்த போதும் அதை மறைந்த தலைவரின் மறு உருவமாக நினைத்து ஆதரிப்பர் ,பாதுகாப்பர்,

அது தற்போதைய தலைவர் Rauff Hakeem ஆகவும் இருக்கலாம் அல்லது அவருக்கு பின்னால் வரும் இன்னொரு தலைவராகவும் இருக்கலாம் ,அது அவர்கள் வரிந்து கொண்ட கட்சியின் கொள்கை ,அதன் கட்டளை தலைமைத்துவ கட்டுப்பாடு ,

அவர்களிடம் ஒளிவு மறைவுகள் இல்லை, தலைமையானது கட்சியின் கொள்கைக்கு விரோதமாக சென்றால் அந்த தலைமைக்கு எதிராகவும் அதை துடைத்து எறியவும் மாற்றவும் அல்லது மாற்றியமைக்கும் தயங்க மாட்டார்கள்,அவர்களிடம் பிரதேசவாதம் இல்லை ,

அதன் காரணமாகவே அவர்கள் பல பிரதேச சுயநல அவர்களது வாழ்வுக்கான தேவைகளை கூட கட்சி என்பதற்காக தியாகம் செய்து இந்த இயக்க உயர்வுக்கு என பல தடைகள் பழிகளுக்கு மத்தியில் செயற்படுகின்றனர்.

இத்தகைய நோக்கத்தை சுமந்து பல ஆயிரம் போராளிகள் பல நயவஞ்சக செயற்பாடுகள் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் பல முறைப்பாடுகளை தலைமைத்துவத்துக்கு தெரியப்படுத்தியும் தலைமையாலும் கூட அவை புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் இந்த மறைந்த தலைவரின் இயக்கத்தை அழித்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கில் உள்ளனர்.

ஆனால் இந்த கட்சியால் அதிஷ்டவசமாக பதவிகளையும் சுகபோகங்களை யும் பெற்ற சிலரினதும் அவர்களது "கட்சி என்றால் என்ன, அதன் கொள்கை என்றால் என்ன,அதன் வரலாறு என்ன என எதுவும் அறியாத பிரதேசவாத அரசியல்வாதிகளின் ,பிரதேச தலைமைகளின் பின்னால் திரியும் இத்தகைய நபர்கள் இனிமேலும் இவ்வாறான விமர்சணங்களை கட்சி போராளிகளுக்கு எதிராக முன்வைப்பதை சம்பந்தப்பட்ட பிரதேச தலைமைகள் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் ,

கட்சி இதுவரை கண்டுகொள்ளாத இத்தகைய கட்சி போராளிகளுக்கு எதிரான விமர்சணங்களுக்கு இனிமேலாவது சம்பந்தப்பட்ட கட்சி பிரபலங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து கட்சி போராளிகளை இனிமேலாவது கண்ணிய்படுத்த வேண்டும், கட்சி நடவடிக்கைகளுக்கு அதன் பதவி நிலைகளுக்கு புதியவர்களை போராளிகளில் இருந்து தெரிவு செய்ய வேண்டும், காலாகாலமாக தங்களது பாட்டன் வீட்டு சொத்தைப்போல் ஆயுட்கால நிர்வாகிகளாக பதவிகளை அனுபவித்து வருவோரை விடுத்து கட்சியின் உண்மையான போராளிகளை பதவிகளுக்கு உள்வாங்க முன்வரவேண்டும்.

இத்தகைய வேண்டுகோளை முன்வைத்தவர்களாக மனவேதனையில் உள்ள போராளிகளுக்கு செவிசாய்த்து எதிர்கால கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கட்சியின் தலைவர் Rauff Hakeem அவர்களையும் மாவட்ட தொகுதி அமைப்பாளர்களையும் கட்சி தலைமைத்துவ சபையையும் வேண்டியவனாகவும்

இந்த கட்சியை தனிநபர் தலைமைத்துவ பிரதேச அரசியல் நலன்களுக்குள் சிக்கவைத்து தனிநபர் புகழ்பாட போராளிகளை அழைக்கும் அல்லைக்கை அரசியல் வாதிகளுக்கு நாங்கள் உங்களுக்கு எதிராக கூட்டாக செயற்பட்டு உங்கள் எதிர்கால அரசியலுக்கு பதிலடி தர தயங்கமாட்டோம் என்ற நல்ல செய்தியையும் தெரிவித்து கொள்கின்றேன் ,

ஒவ்வோரு பிரதேசத்திலும் ஆயிரமாயிரம் சமுக அபிவிருத்தி,பாதுகாப்பு ,மக்கள் இருப்பு , வேலைவாய்ப்பு பிரச்சினைகள் உள்ளன ,வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து எத்தனையோ போராளிகள் உள்ளனர் ,கிடைக்கும் வேலைவாய்ப்புக்கள் கூட எத்தனையோ பிரபலங்களால் பணத்துக்கு விலைபேசப்பட்டு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன, போராளிக்ள பசைவாளி தூக்குவோராக போலின் ஏஜன்டுகளாக ,கொடிதூக்குவோராக திரிய புதிதாக வருவோர் வேலைவாய்ப்புக்களையும் ஏனைய சலுகைகளையும் பெற்று கட்சி போராளிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன,

பிரதேசவாதம் விதைக்கப்பட்டு பிரிவினைகள் தெருத்தெருவாக வலம் வருகின்றன,தலைமையை பழிதீர்க்கும் உள்ளக பிரச்சாரங்கள் மறைமுகமாக அரங்கேறுகின்றன,இந்த கட்சியால் பதவிகளை பெற்று மற்றக் கட்சிகளுக்கு மகுடம் சூட்ட மறைமுக நடவடிக்கைகள் தாராளமாக நடைபெறுகின்றன.

இவற்றுக்கு எதிராக உள்ளக ரீதியாக போராட உண்மையான போராளிகளை ஒன்று திரட்டும் காரியம் ஒன்றும் போராளிகளுக்கு புதுமையான விடயம் அல்ல,அவர்கள் பல உள்ளக போராட்டங்களை செவ்வனே செய்து காட்டியவர்கள் என்பதை இத்தகையோர் மறவாதீர்கள் ,

ஆக்குவதும் அழிப்பதும் உண்மையான அடிமட்ட போராளிகளாயினும் அவர்கள் ஒன்றும் அடிமாட்டு போராளிகள் அல்ல என்பதை இந்தக்கட்சியில் பதவிகளை அலங்கரிப்போர் இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும்.

அரசியல் உரிமை போராட்ட விடயத்தில் அண்ணன் என்றாலும் தம்பி என்றாலும் நண்பன் என்றாலும் பகைவன் என்றாலும் குடும்பம் ,பிரதேசம் பகுதி மாகாணம் மாவட்டம் என எதுவுமே இல்லை ,அவை அனைத்தும் தனிப்பட்ட விடயங்களே ,அல்லைக்கை அளப்பறைகள் பிழைகளையும் கவனயீனங்களையும் சமுக விடயமாக கருதட்டும் மற்றவர்களை விமர்சிக்கட்டும் ,தவறானவர்களை நீங்கள் சரிகானுகின்றீர்கள் என்பதற்காக எல்லோரும் தவறுகளை சரிகானுங்கள் என கூறவரவேண்டாம் ,இது தனிநபர் போராட்டம் அல்ல சமுக அரசியல் போராட்டம் ,மறவாதீர்கள் !

வேதனைகள் பலவற்றை செவிமடுத்து அனுபவித்து மனம்நொந்த போராளிகளில் ஒருவனாக

Post A Comment: