கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அமைச்சர் வஜிர அபேவர்ண இடையில் சந்திப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிக்கும் அமைச்சர் வஜிர அபேவர்ணவுக்குமிடையிலான சந்திப்பு இன்று (15) திங்கட்கிழமை அவரது அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வு காணல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கணக்காளர் நியமனம் தொடர்பிலும் பல்வேறு கருத்தாடல்களும் இடம்பெற்றது.

மேலும் இதன்போது தோப்பூர் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், அலி சாஹிர் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post A Comment: